Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் – இறுதிப்போட்டிக்கு 9-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது.

துபாய்:

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன் 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. இதில் 3 முறை (2010, 2011, 2018) கோப்பையை வென்று இருந்தது.

இதுவரை நடந்த 13 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் ஆடிய 11 தொடரில் 3 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு நுழையவில்லை. 2009, 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெறவில்லை. சூதாட்ட தடை காரணமாக 2016, 2017 போட்டியில் ஆடவில்லை. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »