ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
சென்னை:
அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தீபாவளிக்கு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும்.
* சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* சுங்கசாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தனி வழி
* ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோயம்பேட்டில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
* தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
* ஆயுத பூஜை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar