Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் துணிகரம் – கல்லெண்ணெய் பம்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

லாகூர்:

பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் கல்லெண்ணெய் பம்ப் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கடந்த மாதம் ராவல்பிண்டி நகரில் நடந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »