குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் முந்த்ரா துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மும்பை:
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி ஆகும். இந்த போதைப்பொருள் ஈரானில் இருந்து வந்ததாக தகவல் வெளியானது.
முந்த்ரா துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமம் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப் போவதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 15-ம் தேதி முதல் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளாது என தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar