Press "Enter" to skip to content

அரசுத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை:

நடந்து முடிந்த தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகள் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக, காவல் துறையினருக்கு நல ஆணையம், ஆதிதிராவிடர் நல ஆணையம், மறைந்த தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், இதில் எத்தனை திட்டங்களை செயல்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது, எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தலைமைச் செயலாளர் வழங்கினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »