Press "Enter" to skip to content

இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்: தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனசாட்சியே எதிர்க்கட்சி என செயல்படுவோம் என தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்

* ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியானது 5 மாத கழக ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்!

*  எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனசாட்சியே எதிர்க்கட்சி என செயல்படுவோம்!

*  உள்ளாட்சியிலும் நல்லாட்சியைத் தொடர்ந்திடுவோம்!

*  9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு போற்றும் வெற்றி

*  140 மாவட்ட உறுப்பினர் இடங்களில் 138-ல் வெற்றி

*  1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களில் 1000-க்கும் கூடுதலாக வெற்றி

*  உழைத்த கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

*  தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ள நற்சான்றிதழ்- பொற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெறறி.

*  வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

*  மக்களின் தேவைகளை நிறைவேற்றும் சேவகர்களாக உழைத்திட வேண்டும்.

*  மக்கள் நம் பக்கம், நாம் மக்களின் பக்கம், இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »