எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனசாட்சியே எதிர்க்கட்சி என செயல்படுவோம் என தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்
* ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியானது 5 மாத கழக ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்!
* எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனசாட்சியே எதிர்க்கட்சி என செயல்படுவோம்!
* உள்ளாட்சியிலும் நல்லாட்சியைத் தொடர்ந்திடுவோம்!
* 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு போற்றும் வெற்றி
* 140 மாவட்ட உறுப்பினர் இடங்களில் 138-ல் வெற்றி
* 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களில் 1000-க்கும் கூடுதலாக வெற்றி
* உழைத்த கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
* தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ள நற்சான்றிதழ்- பொற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெறறி.
* வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
* மக்களின் தேவைகளை நிறைவேற்றும் சேவகர்களாக உழைத்திட வேண்டும்.
* மக்கள் நம் பக்கம், நாம் மக்களின் பக்கம், இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar