Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று 6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இதுவரை 5-வது கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தமிழகம் முழுவதும் 5 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 

இந்நிலையில், அடுத்து 6-வது கட்டமாக மாவட்டம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »