பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அவர்களுக்கெனத் தனியாக ‘மாணவர் சிறப்பு பஸ்’ இயக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ஷம்பகிர்வு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கிக்கொண்டே ஆபத்தான முறையில் பயணிப்பது தொடர்கதையாகி விட்டது.
மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக தனிப்பேருந்து’ இயக்கப்படுவதை அரசு விரைவாகப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar
- சிவ.கா, தனுஷ் பட இயக்குநருடன் கைகோத்த லெஜண்ட் சரவணன்!
- உண்மைச் சம்பவத்தை தழுவிய திலீப்பின் ‘தங்கமணி’ மார்ச் 7-ல் வெளியீடு!
- சேலம் அரசியல் பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்
- “உச்ச நட்சத்திரங்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்” – த்ரிஷாவுக்கு ஆதரவாக லெனின் பாரதி காட்டம்
- மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ பிப்.23-ல் தமிழில் வெளியீடு!