Press "Enter" to skip to content

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை (கனமழை)யால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது.

இதன் எதிரொலியால், தமிழகத்தில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   
 
இதையும் படியுங்கள்.. அடைமழை (கனமழை) எதிரொலி: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »