Press "Enter" to skip to content

பொதுமக்கள் கவனமாக இருங்கள்… 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு

17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விட்டு விட்டு அடைமழை (கனமழை)  பெய்து வருவதால், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலுர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய  மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய ஏற்படலாம் என மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »