Press "Enter" to skip to content

டாஸ்மாக் பார் ஒப்பந்தம்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றுள்ளது – அமைச்சர் செந்தில்பாலாஜி

டாஸ்மாக் பார் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 68 விதிகளுடன் ஒப்பந்தம் விடப்பட்டு இருக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை:

டாஸ்மாக்மதுபானக்கடைகள் ஒப்பந்தம் தொடர்பாக விதிமீறல்கள் நடந்துள்ளதாக கூறிமதுபானக்கடை உரிமையாளர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கு விளக்கம் அளித்து செந்தில்பாலாஜி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக்மதுபானக்கடை உரிமையாளர்கள்மதுபானக்கடைளை ஒப்பந்தம் விட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக கூறி எனது வீட்டு முன்பு இன்று திரண்டனர்.

அவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை அவர்கள் தெரிவித்தனர். அதற்கு நான் விளக்கம் அளித்தேன்.

டாஸ்மாக் பார் ஒப்பந்தம்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றுள்ளன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 68 விதிகளுடன் ஒப்பந்தம் விடப்பட்டு இருக்கிறது.

ஆனால் டாஸ்மாக்மதுபானக்கடை உரிமையாளர்கள் பார் கட்டிடத்தின் சான்று எங்களிடம் உள்ளது என கூறி அதனை மட்டுமே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். 1,550 கடைகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு இருக்கிறது.

இடையில் விடுமுறை நாட்கள் வந்ததால் ஒப்பந்தம்களை பிரித்து பார்க்க முடியவில்லை. இன்று அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த முறைகேடும் இன்றிமதுபானக்கடைகள் ஏலம் விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »