இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 31-ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும்.
மறுநாள் (பிப்ரவரி 1-ம் தேதி) இந்த நிதி ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து பேசுகிறார். பொது வரவு செலவுத் திட்டம்டிலேயேதொடர்வண்டித் துறை வரவு செலவுத் திட்டம்டும் அடங்கி இருக்கும்.
வரவு செலவுத் திட்டம் கூட்டதொடர் இரு கட்டங்களாகநடைபெறுகிறது. முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏப்ரல் 8-ம் தேதிவரை மத்திய வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar