Press "Enter" to skip to content

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்த மதுபான பிரியர்கள்

டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபான பிரியர்கள்

சிதம்பரம்:

இன்று திருவள்ளுவர் தினம் கடை பிடிக்கப்படுவதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நாளை கொரோனா முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகையையான நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. 

அடுத்த 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் ஆர்வம் காட்டினர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் குவிந்த மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி செல்ல ஆர்வம் காட்டினார். 

கொரோனா நோற்று தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் அரசு அமல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்காமல் தொடர்ந்து அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் மதுபான பிரியர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »