Press "Enter" to skip to content

திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலில் 2 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 350 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சி:

தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலில் 2 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 350 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் 400க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »