Press "Enter" to skip to content

கொரோனா பரவல் அதிகரிப்பு – வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31-ம் தேதி வரை மூடல்

விடுமுறை நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும். 

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31-ம் தேதி வரை மூடப்படுகிறது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

31-ம் தேதிக்குப் பிறகே எப்போது பூங்கா திறப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »