Press "Enter" to skip to content

கொரோனா பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் போன்றவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 8,978 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வோருக்கு மருந்து தொகுப்பு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இன்று முதல், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களுக்கு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

அந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் போன்றவை இருக்கும்.

கொரோனா பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும்முன்பே இந்த மருந்து தொகுப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »