Press "Enter" to skip to content

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் இன்று 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் உருவாக்குநர்கள் பணிபுரிகின்றனர் என உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

டாவோஸ்:

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிஉரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.

நாட்டில் 156 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதித்து உலகிற்கு இந்தியா நம்பிக்கையின் பூச்செண்டை பரிசாக அளித்துள்ளது.

இந்தியர்களாகிய நமக்கு நமது ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. 21-ம் நூற்றாண்டை இந்தியர்களின் மனோபாவம் மற்றும் திறமையால் மேம்படுத்தும் தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது.

இந்தியா உலகின் 3-வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது.

கொரோனா தொற்று காலங்களில் ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி பல நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கி கோடிக்கணக்கான உயிர்களை இந்தியா காப்பாற்றியது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்தியா உலகின் மிகப்பெரிய, பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான கணினி மயமான பேமெண்ட் தளத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியர்களிடம் உள்ள தொழில்முனைவோர் மனப்பான்மை, புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் திறன், நமது ஒவ்வொரு உலகளாவிய நட்பு நாடுகளுக்கு புதிய ஆற்றலை வழங்க முடியும்.

2014-ல் இந்தியாவில் சில நூறுதான் பதிவு செய்யப்பட்ட விண்மீன்ட்அப்கள் இருந்தன. கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »