உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்துவருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
14.4.2022
00.15: உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது.
ஏற்கனவே உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar