விரிவான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என்று தெற்குதொடர்வண்டித் துறை கூறி உள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை தொடர் வண்டி நிலையத்தில் இன்று மாலை, மின்சார தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார தொடர் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி நின்றது.
தீயணைப்பு துறையினர் மற்றும்தொடர்வண்டித் துறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர்.தொடர்வண்டித் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கின்றனர். பணிமனையில் இருந்து வந்த தொடர் வண்டி என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிதொடர்வண்டித் துறை பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், டிரைவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விரிவான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்துக்குச் சென்று சீரமைப்புப் பணிகளை தொடங்கியிருப்பதாகவும் தெற்குதொடர்வண்டித் துறை கூறி உள்ளது.
பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்திற்கான காரணத்தை மதிப்பிடுவதற்கு குழு அமைத்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக முதலாவது நடைமேடையில் இருந்து தொடர் வண்டிகள் இயக்கப்படவில்லை. செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் புறநகர் தொடர் வண்டிகள் 3வது நடைமேடையில இருந்து இயக்கப்படுகின்றன.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar