Press "Enter" to skip to content

பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இதையடுத்து அவர் கூறியதாவது:

* கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தி.மு.க. அரசு எடுத்தது.

* அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது.

* தமிழகத்தில் 91% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

* கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

* கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »