கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து அவர் கூறியதாவது:
* கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தி.மு.க. அரசு எடுத்தது.
* அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது.
* தமிழகத்தில் 91% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
* கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
* கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar