தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வௌியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஒரு நாளில் 2 ஆயிரத்து 483 தொற்றுகளுடன், நாட்டில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,347 உயிரிழப்புகளுடன் மொத்த பலி 5 லட்சத்து 23 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இதுதொடர்பாக ஒரு அறிக்கை வழங்குவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar