Press "Enter" to skip to content

தஞ்சை அருகே சோகம் – மின்சாரம் பாய்ந்து 9 பேர் பலி

தஞ்சாவூரின் களிமேடு பகுதியில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை:

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் நேற்று அப்பர் விழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் மீது மின்சார கம்பி உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் போராடி தீப்பற்றி எரிந்த தேரை போராடி அணைத்தனர். இதில் தேர் முற்றிலும் எரிந்து போனது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

தேர் பவனியின் போது மின்சாரம் பாய்ந்து 9 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »