Press "Enter" to skip to content

கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தேனி:

தேனியில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைதொடர்ந்து அவர்  கூறியதாவது:

 
தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைவருக்கும் எனது பாராட்டுகள். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். மக்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமாக உள்ளது.

* 10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது தி.மு.க. அரசு. ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

* இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

* தமிழகத்தில்  உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம்.

* கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

* பெரிய குளம், உத்தமபாளையம் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

* மக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லை; விமர்சனத்திற்கு பதில் தர விரும்பவில்லை.

* எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது உள்ளவர்களிடம் இல்லை.

* 133 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.64 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »