Press "Enter" to skip to content

பிளஸ் 2 பொதுத் தேர்வு – முதல் நாளில் 32,674 பேர் ஆப்சென்ட்

தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டன.

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது. 3,262 மையங்களில் 8.69 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் இதில் அடங்குவார்கள்.

இது தவிர தனித்தேர்வர்கள் 28,353 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக்கைதிகள் 73 பேரும் எழுதுகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வின் முதல் நாளான நேற்று 32,674 மாணவர்கள் ஆப்சென்ட் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் தேர்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »