Press "Enter" to skip to content

ஹசாராங்கா அபாரம்: ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேட்பன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ஓட்டங்கள் விளாசினார்.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ஓட்டங்கள் விளாசினார்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதரபாத் அணி 19.2 சுற்றில் வெறும் 125 ஓட்டங்கள் எடுத்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆகி தோல்வியை தழுவியது.

இதனால், 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் 5 மட்டையிலக்குடுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஹசாரங்கா டி சில்வா ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்.. டூபிளெசிஸ் அதிரடி- ஐதராபாத் அணிக்கு 193 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »