Press "Enter" to skip to content

தமிழகத்தில் மின்தடைக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம்- மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளதாவது:

2014-ம் ஆண்டுக்கு முன்புவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் (இலங்கை கடற்படையால்) தினந்தோறும் ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கிட்டதட்ட 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 

2014-ம் ஆண்டுக்கு பின்பு பிரதமர் மோடியின் தலையீட்டால் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் கூட இல்லை. அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நம்முடைய மீனவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறது.

மேலும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மின்தடை என்பதே இல்லாமல் இந்தியா ஒரு மின்மிகை நாடாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »