இதில் சில கல்லெண்ணெய் குண்டுகள் வெடிக்காததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பெரியகுப்பம்:
கடலூர், பெரியகுப்பம் பகுதியில் காவல் துறையினர் மீது கொள்ளையர்கள் கல்லெண்ணெய் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கொள்ளை அடிப்பதற்காக 20 பேர் திட்டமிட்டு வந்தனர். அவர்கள் வருவதாக தகவல் கிடைத்த காவல் துறையினர் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தனர். அப்போது கொள்ளையர்கள் காவல் துறையினர் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது 6 கல்லெண்ணெய் குண்டுகளை வீசினர்.
இதில் 3 கல்லெண்ணெய் குண்டுகள் மட்டுமே வெடித்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிக்காத கல்லெண்ணெய் குண்டுகளை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar