புதிய அதிபராக நியமிக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், புதிய அதிபராக நியமிக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ் எங்கள் விரிவான மூலோபாய கூட்டாண்மை ஆழமாக தொடரும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. திரிபுரா புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar