Press "Enter" to skip to content

சலுகைகளை நிராகரித்தார் தலைமை தேர்தல் ஆணையர்

தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு விருந்தினர் உபசரிப்புக்காக மாதம் ரூ.34 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

புதுடெல்லி: 

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் கடந்த வாரம் பதவியேற்றார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊக்கச்சலுகைகள், பயணப் படிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக, தங்களுக்கு வழங்கப்படும் விருந்தினர் ஊக்கத்தொகைக்கு வரி விலக்கு தேவையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், ஆண்டுக்கு 3 முறை வழங்கப்படும் குடும்பச் சுற்றுலா பயணப் படியை ஒருமுறை மட்டுமே வழங்கினால் போதும் எனவும் அவர்கள் கூறினர். அவர்களின் இந்த கோரிக்கைகள் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »