ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வடமாநில இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை கல்லெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வடமாநில இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar