Press "Enter" to skip to content

ஐபிஎல் இறுதிப்போட்டி – குஜராத் வெற்றிபெற 131 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார்.

அகமதாபாத்:

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டையாட்டம் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 22 ஓட்டத்தில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ஓட்டத்தில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ஓட்டத்தில் ஏமாற்றினார். ஓரளவு தாக்குப் பிடித்து ஆடிய ஜோஸ் பட்லர் 39 ஓட்டத்தில் வெளியேறினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், மிகுதியாக பகிரப்பட்டது போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது. 

குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 மட்டையிலக்கு, சாய் கிஷோர் 2 மட்டையிலக்கு, ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »