Press "Enter" to skip to content

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு அளிக்கிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றார்.

அவர் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, இன்று 4 மாவட்டங்களில் 7 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

2 நாள் ஆய்வு பணி முடிவடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அனைத்து நீர்வழித் தடங்களிலும் தூர்வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணிகளால் வடகிழக்கு பருவமழையின்போது சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்காமல் காக்கப்படும்.

மகசூ, பெருக்கம், மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படுகிறது.

காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும்.

நடப்பாண்டில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாத, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. காபோன் பிரதமருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »