Press "Enter" to skip to content

உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்து முன்னேறும் அஜித்தின் ‘துணிவு’

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். ஜனவரி 11-ம் தேதி வெளியான இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் முதல்நாள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. மேலும், தமிழகத்தில் அஜித்தின் ‘துணிவு’ சற்று அதிக திரையரங்குகளில் திரையிடபட்டதாகவும் கூறப்படுகிறது.

படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை ‘துணிவு’ வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியானது. இதையடுத்து படம் 3 நாட்களில் படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் உலக அளவில் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »