Press "Enter" to skip to content

‘விஜய் 67’-ல் இணைந்த மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி, ப்ரியா ஆனந்த்

சென்னை: நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘விஜய் 67’ படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் ஆகியோர் இணைந்துள்ளனர். இதனை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘விஜய் 67’ என அறியப்படுகிறது. இந்தப் படத்தை செவன் ஒளிப்படத்திரை ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வரும் நிலையில், அது குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து பணியாற்றி வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

“யாணும் இணைந்தேன், தளபதி 67-இல். லோகேஷ் நீ ஆர்ப்பரித்தெழு. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இதனிடையே, இப்படத்தில் நடிகை த்ரிஷாவும் உள்ளதாக தகவல்கள் வெளியானது கவனிக்கத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »