Press "Enter" to skip to content

தொடர்ந்து அவதூறு – ஜோஜு ஜார்ஜ் திடீர் முடிவு

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில், ‘ஜகமே தந்திரம்’, ‘பஃபூன்’ படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள ‘இரட்டா’ என்ற படம் கடந்த 3-ம் தேதி வெளியானது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்ட ஜோஜு ஜார்ஜ், அதில் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் விலகி இருந்தேன். ‘இரட்டா’ படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் அதில் ஆக்டிவாக செயல்பட முயன்றேன். ஆனால், அவதூறுகளால் மீண்டும் என்னை தேவையில்லாதப் பிரச்சினைகளுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். என் தொழில் வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை அனுபவித்து வருகிறேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். நான் உங்கள் உதவியைக் கேட்கவில்லை. என்னை துன்புறுத்துவதை நிறுத்தினால் நன்றாக இருகும். என்னை கலைஞனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்,

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »