Press "Enter" to skip to content

மீண்டும் ‘இதயத்தை திருடாதே’ நாயகி

மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்த தெலுங்குப் படம், ‘கீதாஞ்சலி’. இது தமிழில் ‘இதயத்தைத் திருடாதே’ என்ற பெயரில் வெளியானது. இளையராஜா இசை அமைத்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1989-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றன. பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

இதில் நாயகியாக நடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிஜா. இவர் தந்தை கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்தப் படத்துக்குப் பிறகு மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘வந்தனம்’ உட்பட சில படங்களில் நடித்தார். பிறகு லண்டன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். ரக்‌ஷித் ஷெட்டி தயாரிப்பில் சந்திரஜித் இயக்கும் ‘இப்பனி தப்பித இலேயல்லி’ என்ற கன்னடப் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »