சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதையடுத்து அவர் மீண்டும் ஒரு வாழ்க்கைக் கதை திரைபடம் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை கதையான ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்த சூர்யா, பிரிட்டானியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை கதையில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைப் பிருத்விராஜ் இயக்க இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பிருத்விராஜை, சூர்யாவும் ஜோதிகாவும் சந்தித்துப் பேசினர். அது இதற்கான சந்திப்புத்தான் என்றும் கூறப்படுகிறது.
Source: Hindu