Press "Enter" to skip to content

காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தீவிரமாக நடைபெற்று வந்த இந்தப் படப்பிடிப்பில் அண்மையில் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து தற்போது படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீர் படப்பிடிப்பை முடிந்த கையுடன் இன்று ‘லியோ’ படக்குழு சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 10 – 15 நாட்கள் சென்னையில் நடக்கும் எனவும், அதைத் தொடர்ந்து படக்குழு ஹைதராபாத் சென்று அங்கு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக மே மாதம் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »