Press "Enter" to skip to content

‘நாடு திரும்பும் சோழர்கள்’ பொன்னியின் செல்வன்-2 பட விளம்பரம் எப்படி?

சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.500 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி அன்று வெளியாகிறது.

கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான ‘அக நக’ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது படத்தின் பட விளம்பரம் வெளியாகியுள்ளது.

அருண்மொழி வர்மன் உயிரிழந்த செய்தியுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லரில் பட்டம் சூட்டிக் கொள்ள துடிக்கும் மதுராந்தகன், நாட்டுக்கு திரும்பும் ஆதித்த கரிகாலன், செய்தி சொல்லும் நம்பி, சூழ்ச்சி செய்யும் பெரிய பழுவேட்டரையர், சோழ நாட்டை வேரோடு அழிக்க துடிக்கும் நந்தினி, என கவனம் ஈர்க்கிறது இந்த பட விளம்பரம்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »