Press "Enter" to skip to content

அதிமுகவினர் கூட பேசுகின்றனர்; ஆனால் திமுகவினர் கண்டுகொள்வதில்லை: மு.க.அழகிரி

மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம் என முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “ அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர். ஆனால் என்னுடன் பழகிய திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை. மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம். இந்த நிலை எப்போது மாறப்போகிறது என்பது தெரியும். நானும் கலைஞரின் பிள்ளைதான். என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் ” என தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி, தற்போதைய திமுகவில் இருந்து விலகி இருக்கும் நிலையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »