Press "Enter" to skip to content

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆர்பரித்து ஓடும் குடிநீர் – சோப்பு போட்டு குளித்து கண்டனம்

திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை கண்டிக்கும் விதமாக ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், வீணாகும் குடிநீர் குழாயில் இறங்கி சோப்பு போட்டு குளித்தார்.

பரபரப்பான சாலையோரத்தில் ஆற்றில் இறங்கி குளிப்பது போல பொறுமையாக சோப்பு போட்டு குளித்ததை பார்த்த பிறகாவது குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுபியுள்ளனர்.

Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »