Press "Enter" to skip to content

இன்னும் சில நாட்களில் பிரசவம் : விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த சோகம்

பழனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இரவிமங்கலத்தைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன்(30). கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி மாரியம்மாள்(27). இவர்களுக்கு நான்கு வயதில் ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மாரியம்மாளை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது இருசக்கர வாகனத்தில் கணவர் மகுடீஸ்வரன் அழைத்து சென்றுள்ளார். கரடிகூட்டம் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மகுடீஸ்வரனின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் மகுடீஸ்வரனும், மாரியம்மாளும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நிறைமாத கர்ப்பிணியான மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மகுடீஸ்வரன் படுகாயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஒருசில நாட்களில் பிரசவமாகும் நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »