Press "Enter" to skip to content

ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில்? – காவல் துறையினர் விசாரணை

கரூரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் செங்குந்தபுரத்தில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, கரூர் நகர காவல் நிலைய போலீசார் இன்று பிற்பகலில் அந்த மையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஒருவர் இருந்தனர். அந்த நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தையும் பூட்டினர்.
பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினி தயாராகிவிட்டார்’ – சிஏஏ குறித்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு..!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »