Press "Enter" to skip to content

மதுபோதையில் 8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற தந்தை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுபோதையில் இருந்த தந்தை தனது ‌8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி – லால்குடியைச் சேர்ந்த ராஜதுரை, தனது மனைவிகள் சித்ரா, பேச்சியம்மாள் ஆகியோருடன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது குடிப்பழக்கத்தால் அதிருப்தியடைந்த 2 வது மனைவி பேச்சியம்மாள், 8 மாத பெண் குழந்தையை கணவரிடமே விட்டுவிட்டு சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுள்ளார்.

விஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் 

 
தாய் இல்லாமல் குழந்தையை பராமரிக்க முடியாததால், ராஜதுரை 8 மாத குழந்தையுடன் நெல்லைக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளார். மதுபோதையில் இருந்ததால் ராஜதுரை திருமங்கலத்தில் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். குழந்தை அழுதுக்கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவர், பேருந்து நிலையத்தில் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்றுள்ளார்.
     

உச்சக் கட்ட போதை… உணர்வில்லாத நிலை : பேருந்து நிலைய சாக்கடைக்குள் ‘குடி’மகன் ! 

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் திருமங்கலம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்த காவல்துறையினர், பேச்சியம்மாளை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »