Press "Enter" to skip to content

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30,704க்கு விற்பனை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 குறைந்து ரூ.3,838க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,030 ஆகவும், ஒரு சவரன் ரூ.32,240 ஆகவும் உள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தின் விலை கிரமுக்கு ரூ.49 ஆக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,000 ஆக உள்ளது. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது.

தங்கத்தின் மதிப்பு, தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »