Press "Enter" to skip to content

ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது

சென்னை : கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர் 9’ படிவத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.

ஆண்டு முழுவதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், படிவம் 9ஐ தாக்கல் செய்ய வேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் 9 ஏ’ மற்றும் ‘9 சி’ படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.அந்த வகையில், 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, படிவம் 9ஐ தாக்கல் செய்வதற்கான அவகாசம், நாளையுடன் முடிவடைகிறது.

இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., ஆர் படிவம் 9 ஐ தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த டிசம்பர், 31 வரை கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், வணிகர்கள் கோரிக்கையை ஏற்று, ஜன., 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »