டெல்லி: நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக நாளை இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடு முழுக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கான எதிரான போராட்டங்கள், பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பு பிரச்சனை, பணமதிப்பிழப்பு, காஷ்மீரில் தலைவர்கள் சிறைவைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இடையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு,ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டம், வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது,.
பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு, ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டம், வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது
காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டின் பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்
Source: Goodreturns