Press "Enter" to skip to content

இடது காலில் வீக்கம்: 2-வது தேர்வில் பிரித்வி ஷா விளையாடுவாரா?

காலில் வீக்கம் உள்ளதால் கிறிஸ்ட்சர்ச்சில் நாளைமறுநாள் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பிரித்வி ஷா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

நியூசிலாந்து – இந்தியா மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில்  29-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா இடது காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக இன்று நடைபெற்ற பயிற்சியில்  பங்கேற்கவில்லை.

இன்று ரத்த பரிசோதனை செய்ய இருக்கிறார்கள். இந்த பரிசோதனையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் நாளை காலை பயிற்சியின்போது அவர் எப்படி செயல்படுகிறார் என்று அணி நிர்வாகம் கவனிக்கும். ஒருவேளை அவரால் சரியாக விளையாட முடியவில்லை என்றால் கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் ஷுப்மான் கில் களம் இறங்க வாய்ப்புள்ளது.

இன்றைய பயிற்சியின்போது ஷுப்மான் கில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ததாகவும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில் பிரித்வி ஷா மீது விராட் கோலி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அவர் விளையாட தகுதியுடன் இருந்தால் பிரித்வி ஷாதான் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »