Press "Enter" to skip to content

வீரர்கள் மற்றும் ஸ்டாஃப் என 128 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு இல்லை: பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் ஸ்டாஃப் என 128 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் 2-வது வாரத்தில் தவிர்க்க முடியாத முக்கியமான போட்டிகள் மட்டும் ரசிகர்கள் யாருமின்றி நடத்தப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியதால் பிளே-ஆஃப் சுற்று போட்டிகளை ரத்து  செய்து அதை அரையிறுதி ஆட்டங்களாக மாற்றியது. அரையிறுதி ஆட்டங்களையும், இறுதி போட்டியையும்  ரசிகர்கள் யாருமின்றி நடத்த முடிவு செய்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிகப்பெரிய அளவில் கிளம்பியதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் வீரர்கள் மற்றும் ஸ்ஃடாப், போட்டி அதிகாரிகள், ஒளிபரப்பாளர்கள், அணி உரிமையாளர்கள் என 128 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என பாகிஸ்தான் சூப்பர் லீக் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »