Press "Enter" to skip to content

எம்எஸ் டோனி எந்தவித ஓசையின்றி அமைதியாக ஓய்வு பெறுவார்- கவாஸ்கர் சொல்கிறார்

மற்ற வீரர்கள் போன்று மிகப்பெரிய அளவில் அறிவிப்பது போன்று அல்லாமல் எந்தவித ஓசையின்றி அமைதியாக தனது ஓய்வு முடிவை டோனி அறிவிப்பார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை ஒருநாள் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இந்த இடைவெளியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தயார் செய்து வருகிறது.

ஐபிஎல் சீசன் 2020-ல் சிறப்பாக விளையாடினால் எம்எஸ் டோனிக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் நோயால் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வர வாய்ப்பில்லை. இதனால் ரத்து செய்யப்படலாம். அல்லது நீ்ண்ட நாட்கள் தள்ளிப்போகலாம். இதனால் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை.

இந்நிலையில் மற்ற வீரர்களை போன்று மிகப்பெரிய அறிவிப்போடு எம்எஸ் டோனி ஓய்வு பெறாமல் அமைதியாக வெளியேறுவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பையில் எம்எஸ் டோனி விளையாடுவதை நான் பார்க்க விரும்பினேன். தற்போதுள்ள நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை. அணி அவரை விட்டு நகரத் தொடங்கிவிட்டது. எம்எஸ் டோனி மற்றவர்களை போன்று மிகப்பெரிய அளவில் ஓய்வு முடிவை அறிவிக்கமாட்டார். அவர் ஓசையின்றி அமைதியான முறையில் ஓய்வு பெறுவார் என்று கருதுகிறேன்’’என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »